Clicky

நன்றி நவிலல்
மலர்வு 19 JUN 1960
உதிர்வு 29 JUN 2021
அமரர் சிவகெளரி யோகநாதன் 1960 - 2021 நயினாதீவு 1ம் வட்டாரம்,, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகெளரி யோகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அம்பிகையின் நாமம் கொண்ட
கெளரியம்மா எமை ஆளாத்துயரில்
ஆழ்த்தி விட்டுச் சென்றது எங்கே
உன் பிரிவு கேட்டு கலங்கித் தவிக்குதம்மா
எம் இதயம்

 கட்டிய கணவனும் பெற்றெடுத்த
பிள்ளைகளும் நினைக்கவில்லை
நீ எமை விட்டுப் பிரிந்து
மீளாத் துயில் கொள்வாய் என

 அடுத்தவர் பசிதீர்க்கும் அன்ன பூரணி
தன் பசியினைத் தீர்க்க யாரும் இல்லாத அவலநிலையில்
அடுத்தவர்க்கு தீங்கு இளைக்காத் தாயே
அணைத்தவர்கள் யாரும் இல்லையே அம்மா உன்னருகில்

 கடைசி வரை கெளரி வரும் வரும் என
காத்திருந்தோம் தாயே ஆனால் உன் பிரிவு
கேட்டுத் தரணியில் கதறிக் கதறித் துடிக்கின்றோம்
எமக்கு ஆறுதல் சொல்ல உன் அன்பைத் தவிர
வேறேதும் இல்லையம்மா இப்பாரினில்

 நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியுமாய்
வைரவரைப் பூஜித்த தாயே இப் பூவுலகில்
போதும் உனது சேவை என்று வானுலகம்
அழைத்துவிட்டான் அந்த வருகநாதன்

 தாய்க்குத் தாயாய் தரணியில் எமை உயர்த்திவிட்டாய் தாயே
தன்னலம் பாராது எம் நலம் காத்து நின்றாய் அம்மா
நாம் இனி எங்கு செல்வோம் உன்
இன்முகம் காணத் தாயே

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்