
யாழ். செம்பிமா வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகாமிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல விளக்கே
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் எமை காத்து
துன்ப துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயரவைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்று ஆனதம்மா
நான்கு ஆண்டு காலமதில் உனை பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உனை மறவாமல்
நாம் வாழ்கின்றோம்
ஓயாது உன் நினைவு வந்து வந்து
எதிர் கொள்ள ஒவ்வொரு கணமும்
துடி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
எத்தனை ஆயிரம் உறவுகள் எமை
அணைத்திட இருந்தாலும் அத்தனையும்
எம் அம்மாவுக்கு நிகராகுமா?
ஆண்டுகள் பல ஆனாலும் என்ன
ஆறாது அம்மா எம் துயரம்
நீங்காது அம்மா எம் மனதில் உன் நினைவு
Heart Felt condolences to you and all your family members.