Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 19 FEB 1928
விண்ணில் 26 JUN 2017
அமரர் சின்னத்தம்பி செல்வரட்ணம் 1928 - 2017 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மெமோறியல் ஒழுங்கை, மானிப்பாய் வடக்கு, சங்குவேலி, கொழும்பு, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி செல்வரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டு ஐந்து சென்றதோ
ஆறவில்லை எங்கள் துயரம்
 காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்க பிரிந்தவரே
 ஐந்து ஆண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
 மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!

கனவினிலே உங்கள் உருவம்
 கதைகளிலே உங்கள்
 வார்த்தை பசுமை நிறைந்த
 உறவை விட்டு
 போனதெங்கே! போனதெங்கே!

நீங்கள் மறைந்து ஐந்து
ஆண்டு போனதென்ன உனை
நினைத்து நெஞ்சம் துடிப்பது
என்ன ஐந்து ஆண்டுகள் ஆகட்டும்
 ஆயிரம் மறவோம் நாம்
 உன் அன்பு முகம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்