Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 31 MAY 1929
விண்ணில் 25 APR 2025
திரு சின்னத்தம்பி கோபாலன்
வயது 95
திரு சின்னத்தம்பி கோபாலன் 1929 - 2025 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கந்தரோடை பொன்னையா தோட்டத்தினைப் பிறப்பிடமாகவும், தற்போது கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கோபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 கடந்தாலும்
 ஆறிடும் உங்கள் நினைவலைகள்!
 நேற்றுப் போல் எல்லாம்
 எம் நெஞ்சோடு நினைவிருக்க
 காற்றுப் போல் கண்களுக்கு
 தோன்றாமல் நிற்கின்றீர்தோற்றுப் போனது எம்
 எதிர்பார்ப்பு எல்லாம் தான்
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
 இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு
 இல்லைஆயிரமாயிரம் வினாக்கள்
 விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
 விளையாட்டாகினும் கூட சில மணித்துளிகள்
 விழி அசைக்க மாட்டீரோ...?
 காலங்கள் பல சென்றாலும்
 கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!  

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் வீட்டுக்கிரிகைகள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று பின்னர், 31ம் நாள் நினைவஞ்சலி மற்றும் மதிய போசன நிகழ்வுகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.