Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 APR 1957
இறப்பு 18 MAR 2019
அமரர் சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
ஓய்வுபெற்ற நூலக உதவியாளர்- வலி வடக்கு பிரதேச சபை, காங்கேசன்துறை
வயது 61
அமரர் சாந்திமலர் சுரேஸ்குமார் 1957 - 2019 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்திமலர் சுரேஸ்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
உங்கள் நினைவுகளால் நித்தமும்
கலங்குகின்றோம் அம்மா!

ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!

என் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
என்னை என்றும் வாட்டுதையோ!
ஆறா துயர் தந்து மீளாத்துயில்
கொண்டாய் - நீ வருவாய் என்று
நான் காத்திருந்த காலங்கள் போய்
இன்று ஆண்டு இரண்டாகி விட்டது

இரண்டாண்டு என்ன?
ஈராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம் உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே .... 

எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...    


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 18 Mar, 2019