

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்திமலர் சுரேஸ்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
உங்கள் நினைவுகளால் நித்தமும்
கலங்குகின்றோம் அம்மா!
ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!
என் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
என்னை என்றும் வாட்டுதையோ!
ஆறா துயர் தந்து மீளாத்துயில்
கொண்டாய் - நீ வருவாய் என்று
நான் காத்திருந்த காலங்கள் போய்
இன்று ஆண்டு இரண்டாகி விட்டது
இரண்டாண்டு என்ன?
ஈராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம்
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....
எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
Hello Suresh, Isha, We are truly sorry for your loss. We would like to offer you and your family our deepest and most sincere condolences and may the soul of your wife/mother rest in peace. We will...