Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 FEB 1953
இறப்பு 27 DEC 2020
அமரர் சண்முகம்பிள்ளை கேதாரநாதன் 1953 - 2020 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம்பிள்ளை கேதாரநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பை விதைத்த அப்பாவே
 அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
 பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
 வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!
கலையாத உங்கள் முகமும்
 கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
 அப்பா இனி காண்பது எப்போது?

ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
 அப்பா என்றழைக்க நீங்கள்
 எங்களருகில் இல்லையே!!!
 இன்றும் எம்மை நிழல்
போலத் தொடர்ந்து வரும் அன்பே!
 உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகின்றோம் அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 27 Dec, 2020
நன்றி நவிலல் Tue, 26 Jan, 2021