யாழ். கரணவாய் மேற்கு வல்லியாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சகிலாதேவி இளங்கோ அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கழிந்தாலும்
ஓவியமாய் பதிந்திருக்கிறது
உம் முகம்
வற்றாத கடல்நீர் வற்றினாலும்
வரம் தந்த எங்கள் தெய்வத்தின்
அன்பு என்றுமே வற்றாதே
காயவில்லை விழிகளில் ஈரம்
ஓராண்டு ஓடினாலும் எம்
துயரம் தீரவில்லை
ஆறுதில்லை எங்கள் மனம்
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....
ஒரு முறை வந்து எங்கள்
துயர் துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள்
தொலைத்து விட்டோமே!
காலங்கள் கடந்து சென்றாலும் கடலுடன்
என்றுமே வாழும் அலைகள் போல் என்றும்
உங்கள் நினைவுடன் வாழும்
உங்கள் பிரிவால் வாடும் கணவர் பிள்ளைகள்
சகோதரங்கள்
பேரப்பிள்ளைகள் மருமக்கள்
மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
யசோதினி (சுவிஸ்)