Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 22 MAR 1979
மறைவு 15 MAY 2022
அமரர் செந்தில்வண்ணன் தர்மஜோதி (மைதிலி)
வயது 43
அமரர் செந்தில்வண்ணன் தர்மஜோதி 1979 - 2022 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செந்தில்வண்ணன் தர்மஜோதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:18/05/2023.

அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்! 

தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன் 

இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா! 

ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!

ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா அம்மாவென்று

கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று

பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்புடையீர்! கடந்த 15.05.2022 அன்று இறைபதமெய்திய எங்கள் குடும்பத் தலைவி திருமதி செந்தில் வண்ணன் தர்ம ஜோதி( மைதிலி) அவர்களின் முதலாம் ஆண்டு திவசக் கிரியைகள் எதிர்வரும் 18.05.2023 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அதனைத் தொடர்ந்து  19.05.2023 வெள்ளிக்கிழமை ஸ்ரீ கட்பகபதி விநாயகர் கோவில் வால்தம்ஸ்டோ London E17 4PX கோயிலில் நடக்கும் மதிய பூசையை தொடர்ந்து அன்னாரின் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கட்பகபதி விநாயகர் கோவில் வால்தம்ஸ்டோ நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி.

தகவல்: துவாரகன்

Summary

Photos