11ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:04/06/2025
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வதி நடராஜா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் நினைவோடு நினைவாகி
கனவோடு கனவாகி
உணர்வோடு உணர்வாகி
உயிரோடு உயிராக
கலந்த எம் அம்மாவே!
பாசத்தின் சுமையோடு எம்மை
இங்கே பரிதவிக்கவிட்டு
நீங்கள் மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன்?
அம்மா நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
ஆணிவேராய் எம்மை காத்து
நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டுகள் கடந்தாலும் ஆறவில்லை
எம் மனம் விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
என்றென்றும் உங்கள் நினைவலைகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அம்மா நீங்கள் மறைந்து ஆண்டுள் பன்னிரண்டு ஆனாலும் அம்மா நீங்கள் எப்போதும் போல் எங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள் உங்கள் ஆசிகளும் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பும் தைரியமும் எப்போதும் எங்களை...