2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தமிழ்மணி செல்வராணி உதயகுமார்
(செல்வி)
மல்லிகா வலே தமிழ்ப் பள்ளி- சுவிஸ் மொந்தே
வயது 52
அமரர் தமிழ்மணி செல்வராணி உதயகுமார்
1965 -
2018
கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கிளிநொச்சி பூநகரி நெற்புலவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sion ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தமிழ்மணி உதயகுமார் செல்வராணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!
பத்துமாதங்கள் பக்குவமாய்
வயிற்றில் சுமந்து
சத்துள்ள உணவுவகைகளை
அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த
கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!
அவளருகில் இருந்தால் அகலும் நம் நோய்நொடி
அம்மா என்பவள் ஓர் அதிசயம்
அவளே எம் இனிய அரும்பொக்கிஷம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!! ஓம் சாந்தி..!!!
தகவல்:
குடும்பத்தினர்
என்றும் மறக்க முடியாது உங்களை நீங்கள் வாழந்து கொண்டு உள்ளீர்கள் அழைக்கிறேன் அன்பிலே தவிக்கிறேன் பிரிவிலே வந்திடுங்கள் அருகிலே...