2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தனுஷன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு ஆனதுவே எமையழவிட்டு
ஆறிடுமோ எம் துயரம் எமை விட்டு
மாண்டவர் மீண்டதில்லை இது மானிட நியதி
ஆனாலும் ஆண்டவன் செயலை எண்ணி
ஆறிடவும் முடியவில்லை
கண்கள் கலங்குகிறதே காற்று வீச மறுக்கிறதே
உம் மறைவுதனை எண்ணி- எம் நெஞ்சம்
வெடித்து விடும் போல் இருக்கிறதே
நேற்றுவரை வாழ்ந்த வாழ்க்கை- இன்று
பாரை விட்டு போனதேனோ!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஈராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...!!!!
தகவல்:
குடும்பத்தினர்