2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் செல்லத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும்
அப்பா உன் ஆருயிர் அன்புக்கு ஈடாகுமா?
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர்விடும்
ஒளியாய் மலர்கின்றன
சிந்தை குளிர சிரிப்பொலி
ஒலிக்கும் அன்பு வதனம் எங்கே?
எங்கள் உயிரின் அப்பாவே
எதற்காக மரித்தீர் அப்பா?
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக?
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
எங்கள் அன்புத் தந்தையின் ஆத்மா
சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்