Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 21 MAY 1930
இறைவன் அடியில் 20 MAY 2019
அமரர் செல்லம்மா இராசையா 1930 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா இராசையா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

பண்பின் உறைவிடமாய்
 பாசத்தின் திருவுருவாய்
 மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும் என்றும்
 அணையாத சுடராய் வாழ்ந்து
 கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை மூன்று அகன்றே நின்றாலும்
 அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
 வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி உறவிலே
 கலந்து ஏற்றமுடன்- நாம் வாழ
 ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 எல்லாம் வல்ல இறைவனைப்
 பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: சிவபாதசுந்தரம் குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்