Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 21 MAY 1930
இறைவன் அடியில் 20 MAY 2019
அமரர் செல்லம்மா இராசையா 1930 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா இராசையா அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

யமுனா(இராசாத்தி – ஜேர்மனி), மாலினி(ராதா – பிரான்ஸ்), சதீஸ்குமார்(சதீஸ் – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவபாதசுந்தரம்(ஜேர்மனி), இந்திரகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராசலெட்சுமி, காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, மகாலெட்சுமி மற்றும், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, பரமலிங்கம், மற்றும் கோபாலபிள்ளை, சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவதர்சினி ரமணன், சுஜீவன், மேகலா, நிசாந்தன், சாருஜா நிமலன், சுஜித்தா அகிலன், சஞ்ஜிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சாகித்யா, கவினன், பிரஜீத்தா, தஷ்வின், அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

கங்காதரன், ஸ்ரீதரன், காலஞ்சென்ற விஜிதா, சாந்தினி, இந்திரா, பாலினி, சுரேஷ், ரமேஷ், ரகு, குணேஷ், ரேணு, சுபாஜினி, அருளாநந்தன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(ஆசிரியர்) செல்வராணி மற்றும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்