Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAR 1945
இறப்பு 14 JAN 2020
அமரர் செல்லம்பரம் சிவகுமார் 1945 - 2020 கண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா, ஜேர்மனி Frankfurt ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்பரம் சிவகுமார் அவர்கள் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லம்பரம், பாக்கியம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற சிவநாதன், தங்கபூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அனுஷா(ஜேர்மனி), துஷாந்த்(பிரான்ஸ்), தனோஷா(இலங்கை), நிரோஷா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகரன்(ஜேர்மனி), கரேந்தினி(லண்டன்), யோகநாதன்(இலங்கை), ஜெரோஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயபாலசிங்கம்(நோர்வே) அவர்களின் அன்பு மைத்துனரும்,

கமலாயினி(நோர்வே) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

சஜித்(ஜேர்மனி), ஹபிஷா(ஜேர்மனி), கிர்ஷாத்(இலங்கை) ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உங்கள் இரத்த துளிகளின் வேர்வைகளில்
பிறந்து வளர்ந்தோம்
இனி அப்பா என்றழைக்க யார் இருக்கா??
சொல்லாயோ... எம்மை விட்டு எங்கு சென்றாயோ??

மங்கள நிறமாம் மஞ்சள் - ஆனால்
காலனாய் வந்தது உங்கள் உடலில்
காய்ச்சலாய் சிதைந்தது உங்கள் பொலிவு
இன்று உடைந்தது எம் உணர்வு

அழகான செல்வங்கள் நான்கும்
அழுவதைப் பாராயோ!
அகத்தினில் உங்களைத் தேக்கி
அம்மாவின் கண்ணீர் துடைப்பாயா!

வாழ்க்கைச் சக்கரத்தில் இது இயல்புதான் - ஆனாலும்
ஆழமாய் உள்ள உங்களை இழந்தது பொறுக்கல
வலிக்குது நெஞ்சம் கனக்குது கண்ணீர்
இப்படியொரு பொழுது விடிந்திருக்ககூடாது.. அப்பா!

ஆண்டவனுக்கே அழுகை வருவதென்றால்- உங்கள்
மரணத்துக்கு மட்டுமே கண்ணீர் சிந்துவான்
உங்கள் நினைவுகளால் எங்கள் கண்ணீர்த்துளிகள்
எங்கள் கண்ணீருக்குள்ளும் எப்போதும் உங்கள் நினைவுகள்.........

ஆயிரமாரம் அஞ்சலி உங்கள் ஆன்மா இளைப்பாறட்டும்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: துஷாந்த்(பிரான்ஸ்)