3ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/207701/870b4302-693e-402a-a4ba-607056ba1c54/23-646f04e067d2a.webp)
அமரர் சற்குணராசா சண்முகம்
(குணம், பூனகரி)
வயது 63
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சற்குணராசா சண்முகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் அப்பாவே...
ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலை
குலைந்து நிற்கின்றோம்!!
அன்பின் உறைவிடமே ஆனந்தத்தின் மறுவடிவே
பாசத்திலும் பண்பிலும் இனியவரே
எங்கள் அன்புக் குலவிளக்கே
பாசத்துடன் நடமாடிய தெய்வமே
பண்போடு கதை சொல்லி அன்போடு தாலாட்டும்
பாசத்தின் பிறப்பிடம் நீங்கள் தாலாட்டு பல உண்டு
தாலாட்டும் தோள்கள் எங்கே!
அரவணைக்கும் கைகள் எங்கே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்