Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 20 JUL 1964
மறைவு 28 FEB 2022
அமரர் சரோஜினிதேவி தேவசிகாமணி (அம்மன்)
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்
வயது 57
அமரர் சரோஜினிதேவி தேவசிகாமணி 1964 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி தேவசிகாமணி அவர்களின் அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

மீளாதுயில் கொண்டு எம்மை
ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரோ?
கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர்
பூக்களால் அர்ச்சித்து உங்கள்
ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திப்போமாக...
உங்கள் பிரிவால் வாடும்
சகோதரன் ராசன், ராஜி, மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு வருகின்ற பங்குனி மாதம் 27ம் திகதி கீரிமலை புனித தீர்த்தகரையில் கிரியைகள் நடைபெறும் 30-03-2022 புதன்கிழமை அன்று இல்லத்தில் அன்னாரின் ஆத்மா சாந்தி பூஜை நடைபெற்று அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசணை நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், பழனி குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பழனி - சகோதரன்
தயாளினி - சகோதரி
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute