Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 MAY 1956
இறப்பு 08 JUN 2010
அமரர் சாரதாம்பிகை பேரின்பநாதன் (சாரதா)
வயது 54
அமரர் சாரதாம்பிகை பேரின்பநாதன் 1956 - 2010 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கலட்டி வரசித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அம்மா பதினான்கு
ஆண்டுகள் கரைந்ததம்மா
உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!

நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!

பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு
என்றும் பிரியாத தாய் நீயம்மா!

அன்று எங்கள் அழுகையின் அர்த்தம் புரிந்த
அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!

ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
உன்னை போன்று அன்பு செய்ய
யாரும் இல்லையம்மா இவ் உலகில்...

உங்கள் பிரிவால் வாடும் கணவர் பிள்ளைகள் மருமக்கள் சகோதர சகோதரிகள் பேரப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்