6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், ஸ்கந்தபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி இரத்தினம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் ஆறு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
மனதோடு எமை சுமந்து பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
ஆறாது உந்தன் இழப்பின் துயர் நெஞ்சை விட்டு நீங்காது
தகவல்:
உதயன்
Rest in peace Periya appamma