13ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகராஜன் குறிஞ்சிக்குமரன்
(குமரன்)
வயது 42

அமரர் சண்முகராஜன் குறிஞ்சிக்குமரன்
1968 -
2010
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகராஜன் குறிஞ்சிக்குமரன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உன்னை பறித்து பதிமூன்று
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே குமரா!
வாழ்நாள் முழுவதும் உன்னை
நினைக்கும் போதெல்லாம்- உன்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரையுதய்யா..!
உன்னையேயே உலகமென
உறுதியாய் நாமிருக்க- ஏன்
விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தாயோ?
காலங்கள் மாறலாம்
உன்னை இழந்த ஆண்டுகள் மாறலாம்
உன்னுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உனது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்...
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பாய்...
உம் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
உனது பிரிவின் துயரோடு தாய், சகோதரங்கள்