யாழ். கொக்குவில் கோணாவளையைப் பிறப்பிடமாகவும், நோர்வே stavanger ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாமிநாதன் சாந்தகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது
ஆனால் அந்த நாளின் வலி
இன்னும் என் உள்ளத்தில் புதிதாகவே இருக்கிறது...
மகனே....
உன் பெயரை சொன்னாலே,
என் இதயம் துடிக்கிறது
உன் சின்ன சிரிப்பு,
உன் இனிய குரல்,
என் காதில் இன்னும் ஒலிக்கிறது…
நீ இல்லாத இந்த வாழ்க்கை,
ஒரு காலியான உலகமாக மாறிவிட்டது
என் கையில் பிடித்த சிறு விரல்கள்,
இன்று நினைவுகளாக மட்டும் மீதமிருக்கிறது…
உன் சிரிப்பு என் உலகமே
இன்று அது என் கண்ணீரின் காரணம்…
அண்ணா....
எங்கள் வாழ்க்கையின் நம்பிக்கை நீங்கள் அண்ணா!!!
எம் தைரியம் நீங்கள்
நாங்கள் தடுமாறும் ஒவ்வொரு தருணத்திலும்
உங்கள் நினைவு தான் எம்மை நிமிர வைக்கிறது
ஐந்து ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் இடம் எங்கள் இதயத்தில்
ஒருபோதும் காலியாகவில்லை
ஒவ்வொரு நாளும் உங்களை நினைத்து
ஒவ்வொரு இரவும் கண்ணீர் துளியோடு
எங்கள் வாழ்க்கை தொடர்கிறது
வானத்தில் தேவதைகளாய்
எங்களை பாதுகாத்து காக்கும்
மகனும் அண்ணாவும்
எங்கள் உயிரில் நீங்கள் என்றும் வாழ்கிறீர்கள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய்
அனைத்து கடவுள்களையும்
பிரார்த்திக்கின்றோம்..
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
அம்மா மற்றும் சகோதரிகள்...