யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் விஜயகாந்தன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் உடனடியாக எம்மில்லம் நாடி ஓடி வந்து வேண்டிய உதவிகள் செய்த உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும், துக்கம் விசாரித்தவர்களுக்கும், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், மலர்வளையங்கள் வைத்து சாந்தி அஞ்சலி செலுத்தியவர்கள் இன்னும் ஏனைய நெஞ்சங்கட்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்பாலும் பண்பாலும் அனைவரையும் அரவணைத்த ஐயா என எல்லோராலும் அழைக்கப்பட்ட விஜயகாந்தன் ஐயா இன்று இல்லை....