

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இரத்தினலிங்கம் கிருஷ்ணதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட அன்னாரின் மரணச்செய்திகேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலை பேசி ஊடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்மாலைகள் அணிவித்து ஆறுதல் கூறிய அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.