யாழ். அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் குசலகுமாரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாட்கள் கடந்ததம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்...
காலம் கடந்து காலனவன் எமை
அழைக்கும்வரை கண்ணீரோடு
காத்திருப்போம் உனைக் காணும்
வரை
உன் நினைவு சுமந்த
வலிகளைத் தாங்கி வழிகளைத்
தேடித் தொடரும்இந்த சுகமான வாழ்க்கைப்
பயணத்தில் எமக்கு வழிகாட்டி
வல்லமை தாரும் எம் தாயே!
எம் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள்...உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 04-06-2025 புதன்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிருத்திய கிரியைகள் 06-06-2025 வெள்ளிக் கிழமை மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.