Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 10 MAR 1938
மறைவு 21 JUL 2025
திருமதி இராசலிங்கம் புஸ்பராசமணி (புஸ்ப்பம்)
வயது 87
திருமதி இராசலிங்கம் புஸ்பராசமணி 1938 - 2025 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி(ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்), யாழ். ஆனைப்பந்தி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் புஸ்பராசமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பிற்கு வரைவிலக்கணமாய்,
 ஆணி வேராய் எமைக்காத்து நின்றீர்கள் அம்மா!
இளம் வயதில் அப்பாவைப் பிரிந்த துயர் தெரியாது
துயர் தெரியாது அறிவுரை, நெறிமுறை பல சொல்லி எமை வழிப்படுத்தி,
கஷ்டங்கள் பல வந்தாலும் கவசமாய் எமைக்காத்து,
வாழ்விலும், தாழ்விலும் துணை நின்றீர்கள்,
நன்றி சொல்ல எமக்கோர் வார்த்தையில்லை அம்மா,
பாசமாய் வளர்த்த பிள்ளைகள்
நேசமாய் நிறைந்த பேரர்கள்
அன்பாய் அரவணைத்த மருமக்கள்
பண்பாய் பழகிய உறவுகள் யாவரும்
தங்கள் பிரிவால் துயருறுகின்றோம்.
எங்களைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தீர்களே!
உங்களுடன் வாழ்ந்த காலங்கள்
எம் வாழ்வில் மறக்க முடியாதவை
எம் ஜீவன் உள்ளவரை தங்கள் நினைவுகள்
எம் இதயத்தில் நிறைந்திருக்கும்,
தங்கள் ஆத்மா சிவனடிக்கீழ்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.