Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 JAN 1948
இறப்பு 07 SEP 2023
திரு இராசையா மகாதேவன் 1948 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு முடமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா மகாதேவன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்
 என்றென்றும் மறைந்திடுமா? 

காலத்தின் கட்டளையோ- ஐயா
 இன்று நீர் கடவுளாகினீர்
அருகில் இருந்தும் பார்க்க முடியாமல்- நாம்
 உமை அன்றாடம் துதிக்கின்றோம்

 அப்பா கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும் பாசத்துடன்
உறவாகும் உங்கள் அன்பையும்
 பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து
கண்ணீர் சொரிகின்றோம்...

எத்தனை தான் எமக்கிருந்தாலும்
 ஏங்கித் தவிக்கின்றோம் உனை நினைத்து
 எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை
எங்களால் மறக்கமுடியாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உணவு, தண்ணீர் வழங்கியவருக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அமரர் இராசையா மகாதேவன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் “கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும்”, வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 07-10-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் "அன்னாரது இல்லத்திலும்” நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து, அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி கிழக்கு.

அமரர் இராசையா மகாதேவன் அவர்களின் 31வது நினைவுநாள் எதிர்வரும் 07-10-2023 சனிக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் LA COURNEUVE பிள்ளையார் கோவில் (90 RUE EMILE ZOLA 93120 LA COURNEUV) மண்டபத்தில் நடைபெற இருப்பதனால், தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் நினைவஞ்சலி நிகழ்விலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.