Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 JAN 1948
இறப்பு 07 SEP 2023
திரு இராசையா மகாதேவன் 1948 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு முடமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா மகாதேவன் அவர்கள் 07-09-2023 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா லட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சின்னையா சௌபாக்கியவதி தம்பதிகளின் மருமகனும்,

கலைஞான சொரூபி(வசந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற திருமேனி, விமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்கந்தரூபன்(சுவிஸ்), மயூரன்(பிரான்ஸ்), மகிபன், பரணிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகி(சுவிஸ்), சிவகௌரி(பிரான்ஸ்), கோபிநாத்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

ஹர்ஜீத், டெலுக்‌ஷன், வர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நல்லைநாதன்- லிங்கவதி(ரதி), திருநாவுக்கரசு- புஸ்பராணி, தருமசொரூபி- தர்மராஜா, தர்மகுலலட்சுமி(சாந்தா)- வேலாயுதபிள்ளை, லாவண்யசொரூபி(லாலா)- காலஞ்சென்ற அமுதலிங்கம், ஸ்ரீரங்கநாதன்(ஸ்ரீ)- இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல.42/1 இராமலிங்கம் வீதி, முடமாவடி கெனடிலேன், திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தா - மனைவி
ரூபன் - மகன்
மயூரன் - மகன்
மகிபன் - மகன்
கோபிநாத் - மருமகன்

Photos