
எமது பரம்பரையின் அற்புதமான, இனிமையான, அன்பான, இரக்ககுணம் உடைய பெண்களில் ஒன்றான எனது அன்பு மச்சாள் உனது சிறுவயது நினைவுகள் என் மனதை வாட்டிவதைக்கின்றது. நீ எனது மாமாவின் மகள் என்பதற்கு அப்பால் நாம் ஊரில் அருகருகான வீடுகளில் வாழ்ந்துவந்ததனால் எம்மை அறியாமலே உன்மீது அதிக பாசம் ஏற்பட்டுவிட்டது. நீ கோவம் கொள்கின்றபோது, சந்தோசப்படுகின்றபோது உன் முகத்தின் தோற்றங்கள் என் மனதைவிட்டு என்றும் அகலாது. நீ சயிக்கிள் ஓடும் அழகு, பாடசாலைக்கு செல்லும் அழகு, அங்கும் இங்குமாக உனதுவீட்டிற்கும் அப்பு வீட்டிற்கும், எங்களது வீட்டிற்கும், சித்தப்பா வீட்டிற்கும் சென்றுவரும் உனது சிறுவயது நினைவுகள் என்மனதைவிட்டு என்றும் நீங்காது. இறப்பு என்பது உலகில் பிறந்த அனைவருக்கும் நிச்சயமானது. ஆனால் இந்த இளமையான வயதில் உனது பிள்ளைகளை மற்றும் எம்மையெல்லாம் விட்டுவிட்டு எங்களிற்கு கவலையும் சோகத்தையும் தந்துவிட்டு நீ முன்னால் சென்றுவிட்டாய். உனது பிரிவை எம்மால் தாங்கிகொள்ள முடியாது, உனது நினைவுகளுடனேயே நாங்கள் என்றும் வாழ்வோம். உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கிறோம். அன்புடன் மச்சான் வரதன் மற்றும் குடும்பத்தினர் அவுஸ்ரேலியா / சிட்னி.
சுசி நீ நலம் பெற மூன்றுவேளையும் இறைவனிடம் கையேந்தினேன், நீ பல்லாண்டு காலம் நலமுடன் வாழ தினமும் கடவுளை வேண்டினேன், நீ தொண்ணூறு தொண்ணூற்றைந்து வருடங்கள் நலம்பெற்று வாழ தினமும் கடவுளிடம்...