2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராஜசிங்கம் கனகாம்பிகை
வயது 81
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், நவிண்டில் கரணவாய் மத்தி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜசிங்கம் கனகாம்பிகை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24/02/2023
எம்முன்னே வாழ்ந்த தெய்வம்
மறைந்து ஆண்டிரண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும்
கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின்
தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து
நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…! நீ
இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும்
தாயே உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய நான் வணங்குகிறேன், தனுஷாவின் அப்பம்மா. நீங்கள் எப்பொழுதும் எங்கள் எண்ணங்களில் இருப்பீர்கள்.