Clicky

பிறப்பு 25 OCT 1929
இறப்பு 18 JUL 2026
திரு இராசதுரை செல்லப்பா
முன்னாள் சிறை அதிகாரி, முன்னாள் மாமூலை மகாவிஷ்ணு ஆலயத் தலைவர்
வயது 96
திரு இராசதுரை செல்லப்பா 1929 - 2026 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Lincy 27 JUL 2026 United Kingdom

இராசதுரை மாமாவின் இறுதி நிகழ்வின் போது ... நீறணிந்த நெற்றி நடுவில் சந்தணப் பொட்டு மகிழ்ச்சியான முகத்தில் கணமும் மலரும் நிறைய சிரிப்பு. நெஞ்சில் வஞ்சகம் இல்லை நேர் நின்ற பார்வை மனதில் அஞ்சுவதற்கும் அஞ்சார் அடுத்தவர் நலனென வந்தால். தமிழால் உயர்ந்து சைவம் சைவத்தை உணர்தியது தமிழ் பாராயணம் செய்யத் தமிழில், பாகாய் உருகும் மனமே. குரல் சற்று உயரம் அதிகம் குமிறி வரும் சொற் கூட்டம் அடுக்கு வரி தொடரும் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கும். இக்கணத்திற்கு வாழ்வோர்க்கு எக்கணத்திலும் துன்பமில்லை நாளை என்று வந்தால் அன்று பார்க்கலாம் என்றே. வெண்கலக் குரலில், வெல்லும் தமிழில் சொல்ல மாமூலை மண்ணில் வந்த மதி வல் தமிழனும் தானோ. வேகமாக வண்டி மிதித்து வேண்டிய இடம் போக சுந்தரத் தமிழில் பாடி வர 'மயங்காத மங்கையரும் உளரோ ? ' நீண்டதோர் வாழ்க்கை நிறைந்தன பல நினைவில் வைக்க நன்றே நடத்திய பெரு மகனுக்கு நன்றி சொல்லிக் கை கூப்பியே! தானொருவன் தனியல்லவென தனக்கொரு படை சேர்த்த மனங்களின் இராட்சியத் தலைவன் இராஜ துரைக்கு நன்றி பல கோடி. நின்று போகாது உமதெண்ணம் நின்று நிலைக்கும் மனதில் என்றும் !!! மீண்டும் சந்திக்கும் வரையில் .... நன்றி மாமா !!! அமிர்தநாதர் குடும்பம் ஆடி 2026