Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசதுரை ஞானாம்பிகை
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை சாவகச்சேரி இந்துக் கல்லூரி
இறைவன் அடியில் - 11 AUG 2023
அமரர் இராசதுரை ஞானாம்பிகை 2023 சாவகச்சேரி கல்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 31/07/2024

யாழ்ப்பாணம். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசதுரை ஞானாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் வீட்டு குல விளக்கே அம்மா
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்

கண்ணின் இமை போல் எமை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயர வைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்று ஆனதம்மா ஓராண்டு

ஓராண்டு காலமதில் உமைப் பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உமை மறவாமல்
நாம் வாழ்கின்றோம் எத்தனை ஆயிரம் உறவுகள்
எமை அணைத்திட இருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?

ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாது எம் துயரம்
நீங்காது அம்மா எம் மனதில் உன் நினைவு
இன்னொரு பிறப்பு ஒன்று உண்டெனில்
உன் பிள்ளைகளாக மட்டுமே நாம் பிறந்திட வேண்டும் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!

தகவல்: குடும்பத்தினர்