யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி, தட்டாதெரு சந்தி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ராகினிதேவி வரதராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக்கிரியைகள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் இல.1001, வண்ணார்பண்ணை கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள திவ்ய மஹால் மண்டபத்தில் நடைபெற இருப்பதனால், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல, 08,அரசடி ஒழுங்கை,
தட்டாதெரு,
யாழ்ப்பாணம்.