5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புஷ்பராணி லோகநாதன்
உதிர்வு
- 30 NOV 2020
Tribute
11
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாக கொண்டிருந்த புஷ்பராணி லோகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலச் சுழற்சியில் ஐந்தாண்டு
கடந்து போனாலும் இன்னும்
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம்
நீங்கள் இல்லாத துயரம்
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
ஓயாது உம் குரல் இனிமை
எதிரொலிக்க ஒவ்வொரு கணமும்
நினைத்து நினைத்து அழுகின்றோம்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்