நீங்கள் எம்மை பிரிந்து சென்றீர்கள் என இருதயம் பிளக்கும் செய்தி வந்தது
இயற்கை அடைந்தீர்கள் எனச் சொல்லும் வயது உங்களுக்கு இல்லை
கடவுள் எடுத்தார் என்றால் அதை கடவுள் எனச் சொல்வது சரியும் இல்லை
தோட்டத்தில் இருந்த அழகான பூவை பறித்தது யார்?
வாட்டத்தில் எம்மை எல்லாம் தள்ளி விட்டு எம்மிடம் இருந்து
உங்களைப் பிரித்தது யார்?
உங்கள் சிரிப்பிலும் பேச்சிலும்
அமைதி பெற்ற நாம்
இன்று அதைத் தொலைத்து விட்டோம்
வருவீர்கள் என்று நாம் இருந்தோம்
மகிழ்ச்சி தருவீர்கள் என்று காத்திருந்தோம்
கடைசியில் கொடும் செய்தி வந்ததே அண்ணா!
சொல்ல வார்த்தை இன்றி கலங்கி
நிற்கிறோம்
கொல்லும் சோகம் எம்மைச் சூழ
நொறுங்கிப் போகின்றோம்
காலங்கள் கடக்க
கண்ணீர் வற்றிப் போகும்
யுகங்கள் முழுவதும் உங்கள்
நினைவுகள் எம்மைத் தொடரும்!
அன்போடு அணுகி அமைதியாகப் பேசும் பிரதீப் நம்பமுடியவில்லை. நாளையதலைமுறைக்காண பணியில் பயணித்தவாறிருந்த இளையவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் துணைவியார்...