யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கோயில் சந்தை, உடுப்பிட்டி சந்தை வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மகேசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.