Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUN 1939
இறப்பு 12 APR 2021
அமரர் பொன்னம்மா கந்தையா 1939 - 2021 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்மா கந்தையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

வருடங்கள் ஐந்தாகியும் எங்கள் இதயங்களில்
என்றும் நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!

நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது

உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா

எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு மாறாது
உன் உறவுகள் மறக்காது

உங்கள் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்