Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 25 JUL 1927
மறைவு 26 JAN 2019
அமரர் பொன்னையா மாரியம்மா
வயது 91
அமரர் பொன்னையா மாரியம்மா 1927 - 2019 எழுதுமட்டுவாள், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா மாரியம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.    

ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
நெஞ்சடைக்கும் நினைவுகளால்
நித்தமும் நாம் கலங்குகின்றோம்
ஒருமுறை வந்து எங்கள்
துயர்துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!

என் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
எனை என்றும் வாட்டுதையோ !
ஆறா துயர் தந்து மீளாத்துயில் கொண்டாய்
வருவாய் என்று நான்
காத்திருந்த காலங்கள் இன்று
ஆண்டு ஐந்து ஆகியது

ஐந்தாண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ !

கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலன் அவன் அழைத்து விட்டான்
உங்கள் கனவை கலைத்து விட்டான்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாது
கலங்கி நிற்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
     இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices