Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 01 NOV 1930
மறைவு 29 JAN 2021
அமரர் பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா
வயது 90
அமரர் பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா 1930 - 2021 இளவாலை பத்தாவத்தை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு விதான்ஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அப்பா !

எம் குடும்பத்தின் விருட்சமே !
எம் அனைவரையும் கரைசேர்த்த ஓடமே !
அன்பையும் அறிவையும் அழகாக
அள்ளித்தந்த அன்பு நீங்கள்....
சமுதாயத்திலே தலை நிமிர்ந்து நிற்க வைத்த
சரித்திர நாயகன் நீங்கள்....
உண்மையையே பேசி
உத்தமனாக வாழ்ந்த உண்மையும் நீங்கள்....
நேர்மையை விதைத்து
நேரிய வாழ்வை வாழச் செய்த
நேர்மையாளனும் நீங்கள்....
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் என்னும்
வள்ளுவத்தை வாழ்விலே கொண்டு
ஒழுக்க வாழ்வின் மேன்மையை
சிறப்பாகப் போதித்த சிறந்த ஒழுக்கசீலன் நீங்கள்...
துன்பம் கண்டு துவண்டால்
தூக்கித் துடைக்கும் தூயவனும் துணையும் நீங்கள்....
நாங்கள் கண்திறந்த போது
எங்கள் கண்ணிலே தென்பட்ட
தாரகையும் நீங்கள்...
உங்களை இழந்து நாங்கள்
கண்ணீர் வடித்தாலும்....உங்கள்
காலங்கள் பொன்னானவை....
கடவுளுக்கு நன்றி கூறுகின்றோம்
கடமை உணர்வுள்ள
ஒரு அப்பாவைத் தந்ததிற்கு...
இறைவா!!
வரமொன்று கேட்கின்றோம்.... 

உம் சந்நிதியில் அப்பா இளைப்பாற வேண்டும்
எமக்காகவும் அவர் பரிந்து பேச வேண்டும்...

அப்பாவின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில், எங்கள் இல்லங்களிற்கு வருகை தந்து, அப்பாவின் திருவுடலுக்கு மலர் வளையங்கள் வைத்தும், அவற்றை அனுப்பி வைத்தும், மலர் மாலைகள் போட்டு அஞ்சலி செலுத்தியும் அவருடைய ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபித்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூகவலைத் தளங்கள் ஆகியவை மூலமாகவும் எமது துயரத்தில் பங்குகொண்டவர்களிற்கும், அப்பாவின் இறுதி இரங்கல் திருப்பலியில் கலந்துகொண்டு அவருடைய ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபித்த, யாழ் மறைமாவட்ட மேதகு ஆயர், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், புனித பத்திரிசியார் கல்லூரிக் குடும்பம், பழைய மாணவர்கள், நண்பர்கள் மற்றும் எம் அன்பான உறவுகள் ,மேலும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்த எம் அன்புள்ளங்கள் அனைவருக்கும், எமது குடும்பத்தின் சார்பில் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்து அப்பாவுடனும் எம்முடனும் செபத்தில் இணைந்திருக்க அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 119 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.