1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பெரியதம்பி தர்மபுத்திரி
(கனகம்மா)
மறைவு
- 07 FEB 2021
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
ஓமந்தை நாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், சேமமடு, தோணிக்கல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி தர்மபுத்திரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்கிறது....
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவு நிறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்