Clicky

பிறப்பு 09 JUL 1951
இறப்பு 24 MAR 2022
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி
முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1, பொருளியல் துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகம்(1974-1990, 2003-2013) சமூக ஆர்வலர், சமூகதொண்டர், பொருளியல் எழுத்தாளர் B.A.Hons. (Cey) Peradeniya, 1969 Batch, M.A. in Economics(Jaffna, 1981)
வயது 70
அமரர் பேரின்பநாதன் நல்லதம்பி 1951 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivakumar.Balachandran, Pungudutivu-2/ Toronto, Ontario, Canada 28 MAR 2022 Canada

கண்ணீர் அஞ்சலி  அன்பும் ,பண்பும்  ஆன்றமைந்த அறிவும் ,அமைதியும் ,அடக்கமும் சிறப்புற பெற்ற அண்ணன் பேராசான் பேரின்பநாதன் அவர்களின் இழப்பு எங்கள் காற்று வழி  க்கிராமத்தின்  பேரிழப்பு .தமிழீழ தேசத்தின் கல்வி பாரம்பரியத்தின் மூத்த புத்தி ஜீவிகளிலொருவரை இன்று இழந்து வாடுகின்றோம்.புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வரும் தமிழ் கல்விமான்களை காலம் தோறும் காலன் கவர்ந்து செல்வது அவன் வாடிக்கையான விளையாட்டு .ஆனால் எம் நெஞ்சம்  எரிமலையாய் குமுறுகின்றது.எம் பேராசானை இழந்து  சொல்லணா துயரில்  தவிக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் ,சகோதரர்களுக்கும் ,உற்றார் ,உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் ,பழைய மாணவர்களுக்கும்,யாழ்ப்பாண பல்கலை கழக பொருளியல் துறை சார் பணிக்குழுமங்களுக்கும்  எமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா புங்குடுதீவு பெருங்காடு மீனாட்சி சுந்தரேஸ்வர பெருமான் பாதங்களில் சாந்தி பெற பிரார்த்தித்து பணிந்து நிற்கின்றோம் . ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி !!"துக்கமோ ,துயரமோ ,இதமோ ,இன்பமோ ,வாழ்வோ ,சாவோ  வாழ்க்கை சக்கரத்தில் மரணம் நிச்சயமானது .எதுவும் நிரந்தரமில்லை  மாறும் ,மாறும் எல்லாம்  ,மாறிக்கொண்டே இருக்கும். இன்பம் வரும் ,துன்பம் வரும் ,பிறப்பு வரும் ,இறப்பு வரும் இதுவும் எல்லாம் கடந்து போகும் .இது தான் மனித வாழ்வு" சிவகுமார் .பாலசந்திரன் குடும்பம்  -புங்குடுதீவு -2 /டொரோண்டோ ,கனடா