Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 DEC 1964
இறப்பு 07 JUL 2026
திருமதி பவளராணி ஜெயானந்தா
வயது 61
திருமதி பவளராணி ஜெயானந்தா 1964 - 2026 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பறாளாய் வீதி, சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பவளராணி ஜெயானந்தா அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மரகதவல்லி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பத்மநாதன் பராசக்தி (நெசவு ஆசிரியை) தம்பதிகளின் அருமை மருமகளும்,

ஜெயானந்தா (FRANCE) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிவேதிகா (UK), சாயினி (COLOMBO) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் ஆசைத் தங்கையும்,

செல்வராஜா (UK), ஜெயக்குமார் (GERMANY) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரேமளா (GERMANY) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

நிவித்தா - தர்சன் (SWISS), நிருசங்கர், ஜனார்த்தனன் (GERMANY) ஆகியோரின் நேசமிகு பெரியம்மாவும்,

அடீஸ்ஜெய், ஆலியாமிலா (SWISS) ஆகியோரின் பேரன்பு மிக்க பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: கணவர், பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

ஜெயானந்தா - கணவர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices