

யாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமானந்தம் விசாலாட்சி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:17/10/2022.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த
எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது
தான் ஏனோ
மென்மையான உள்ளம்
கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய
அன்புத் தெய்வமே
நான்கு ஆண்டுகள் ஆனதம்மா - ஆனால்
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை அம்மா
நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
உன்னதமான அன்னையே - உங்கள்
உடல் மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள்
பாசத்திற்கு நாம் பட்ட கடன்
தீராதம்மா.
என்றும் உங்கள் நினைவில்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.....