
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை மண்டுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நேசதுரை நிலக்ஷன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் இத்துயர் சுமந்து ஓராண்டு
ஆனாலும் நித்தம் உனை
நினைத்தே நிம்மதி இழக்கின்றேன்
ஓராண்டு என்ன நூறாண்டே ஆனாலும்
கண்விட்டு அகலுமோ என் கண்ணனின் விம்பம்!
தூக்கமில்லா இரவுகளை எங்களுக்குத்
தந்துவிட்டு நொடிப்பொழுதில் எம்மை
மறந்து துயில் கொள்ளப் போனதெங்கே
அன்பு சரித்திரம் படைக்க வந்த உன்னை
அநியாயமாய் சாவுக்கா விட்டுவிட்டேன்
உன் முகம் என் மனதில் நீங்காமல் இருக்குதடா...
ஓராண்டு கடந்தாலும் அழியாமல் இருக்குதடா..
பிரிவு துயரில் அம்மா..
கைப்பிடித்து நடக்க கற்றுக்கொடுத்தேன்
தடுக்கி விழாமல் நீ நடக்க
கண்கலங்கி காலம் போனது
இன்னும் முடியவில்லை உன்னை மறக்க
எனக்கு பின் பெயர் சொல்ல பிள்ளை
உள்ளான் என பெருமூச்சு விட்டிருந்தேன்
கண் இமைக்கும் வேளையிலே காலன்
அவன் அழைத்துகொள்ள
இன்னும் என் மனம் சமரசம்
ஆகவில்லை உன் பிரிவில்- என்றும் அப்பா
தம்பி நீ எங்கே சென்றாய்
ஓராண்டு கடந்தாலும் உன்நினைவு
மனதை விட்டு மறையவில்லை
கண்ணீரின் ஈரம் காயவில்லை
அனைவருக்கும் செல்லப்பிள்ளை நீ
யாதும் நீயாக நானும் தாயாக
உன் கண்ணம் கிள்ளி விளையாட ஆசை!
ஒரு முறை சண்டையிட வருவாயா?
பிரிவின் துயரில் அக்கா
உன் கைகள் பற்றிய தோள்களில்
நட்பின் ஸ்பரிசம் இன்னும் மாறவில்லை
நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்..!
பிரிவு துயரில் நண்பர்கள்
Miss you da my chellam