
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை மண்டுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நேசதுரை நிலக்ஷன் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
கண்ணனைத் தேடுற
கண்ணீரில் கரைந்த படி
கவி வரிகள் சில எழுதி
கங்கையிலே விடுகின்றேன்...
என்னுடன் பிறந்தவனே
என்னருமைத் தம்பியே!
கண்ணா! உன்னைத் தேடி என்
கண்கள் களைத்ததடா...
நீ நடந்த பாதைகளும் நீ படுத்த படுக்கைகளும்
நீ விட்டுச் சென்ற எத்தனையோ நினைவுகளும்
என்னைப் புரட்டி என் இதயத்தை துளைத்து
உன் நினைவில் துடிக்க வைக்குதடா என் தம்பி
சின்னஞ்சிறியவனாய் சிறகடித்து பறந்தாய்
பென்னம் பெரியவனாய் வளர்ந்து வகை செய்தாய்
இன்னும் சிலகாலம் உன் இளமை திறம்படவே
பென்னம் பெரிய கனவுகளை நான் கண்டேன் என் தம்பி...
இத்தனையும் நீறாக்கி இடி வீழ்ந்த செய்தியாய்
இழவு வந்து சேர்ந்ததுவோ என் தம்பி
உயிர் பிரியும் வேளையிலும் அக்காவை அழைத்தாயே
உதவிக் கரம் நீட்டி என்னைத் தான் அழைத்தாயே...
மயிரிழையில் உயிர் தப்பி வந்திருக்கக் கூடாதோ
மயக்கமுற்று காலன் உனை விட்டிருக்க கூடாதோ
வாழும் வழி தெரியாது வதைப்பட்டு கொண்டிருக்கின்றோம் நாம் தம்பி
மாழும் துயரத்திற்கு மீட்சி உண்டோ கூறாய் நீ
இரணை மடு குளத்து நீர் கங்கையுடன் கலந்ததுவே
இமயத்து இறைவனிடம் நீயும் சரணடைந்தாயோடா
என்னுடன் பிறந்தவனே என்னருமைத் தம்பியே
கண்ணா! உனைத்தேடி என் இதயம்...
Miss you da my chellam