Clicky

31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 29 SEP 1938
இறப்பு 17 OCT 2025
திருமதி நவரட்ணம் சரஸ்வதி 1938 - 2025 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ் . சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் சரஸ்வதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

பூத்திருந்த இடங்கள் எல்லாம்
 பாலைவனம் போல் தெரிய நடந்து போன
 பாதையில் உங்கள் கால்தடங்களே

 விடிகின்ற வேளைகளில் கண்ணெதிரே
 நிற்பவர் இல்லையே என ஏங்க கண்ணீர்
வழிகின்றதே சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்

கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை நாங்கள்
 எப்படி மறப்போம்?

 நாட்கள் 31 கடக்கட்டும் வயதுகள்
ஓடிச் செல்லட்டும் நீங்கள்
அருகில் இருப்பதாய் வாழ்க்கையை
தொடர்கின்றோம்... 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியைகள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து ஆத்ம சாந்திப் பிரார்த்தினையிலும் அதனைத்தொடரந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.