Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மண்ணில் 31 AUG 1938
விண்ணில் 19 MAR 2023
அமரர் நவமணி நாகசுந்தரம்பிள்ளை 1938 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஊர்காவற்துறை, இந்தியா சென்னை, யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவமணி நாகசுந்தரம்பிள்ளை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 20-04-2023 வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பகல் 12:00 மணியளவில் “நடராஜா பரமேஸ்வரி மணிமண்டபத்தில்” (நல்லூர் கோவில் அருகாமையில்) நடைபெறும் அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து கொள்ளும்வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
இல. 595/14, நாவலர் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.