Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 27 JUL 1930
விண்ணில் 13 JAN 2021
அமரர் நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் (சந்திரா)
வயது 90
அமரர் நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் 1930 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வல்வெட்டித்துறை அ.மி பாடசாலை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.

கருவாகி நாம் உருவான
நாள் முதலாய் பெருந்துன்பம்
அனைத்தும் பொடியாக்கி
எங்களுக்கு எல்லாமாய் வாழ்ந்தீர்களே..!!

உங்கள் பிரிவால்
எல்லாம் இழந்தோமே எங்கள்
உள்ளத்தில் தெய்வமாய் இருப்பீர்கள்
உங்களை நினைத்து என்றும் தொழுதிடுவோம்
இறைவன் திருவடியில் சாந்தி பெறுவீர்கள்
ஓம் சாந்தி...! சாந்தி... சாந்தி!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.