யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf வை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் சுந்தரலிங்கம் இராஜகுமார் அவர்களின் நன்றி நவிலல்.
"பேராயிரவர் வழிவந்த உம்மை பேறு கொண்டு ஆராதிக்கின்றோம் இன்று"
பெரிய சந்நாசியாரின் திருவாக்கினிலே மகிழ்ந்து
பெரியார் கந்தர் ஆனந்திப்பிள்ளையை மணந்து
அரியபேறாம் அபிராமிப்பிள்ளையை வரமாக்கி
ஆனந்த வாழ்வுதனில் நமசிவாயமவரைக் கரம்பிடிக்கப்
பாரியதெனப் புண்ணியம் சுந்தரலிங்கமாய்ப்பூத்திடப்
பாலிக்கவே சிதம்பரேஸ்வரியைத் திருமணமாய் முடித்து
விரியுமாம் சந்ததிக்கு விடிவெள்ளியாய் உதித்த இராஜகுமாரா!
வீடு வாசல் முற்றம் எல்லாமே காடாகி வெந்ததப்பா!
பிரிய உனக்கு எப்படி மனம் வந்ததோ? யாமறியோம்!
பிரியாமன பத்தினி, பேறான பிள்ளைகள் பரிதவிக்க
அருமையான சகோதரங்கள் அகலாத பேரர்களும்
அத்தனை உறவுகளும் ஐ யோவென்று கதறியழ
ஒருதருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் நீயோ
ஓடி ஒளிந்து உயரப்பறந்து வானம் புகுந்ததேனோ?
கரிய முகிலும் கருடனுமுனைத் தேடிக்களைந்துப் போனதே!
கவினுறு ஜேர்மனியிலும் கருவாகிய இணுவில் கண்ணீராகிறது.
உன் வரவுக்காய் காத்திருக்கும் குடும்பத்தினர்
இராஜகுமார் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு குடும்பத்தினருக்கும், சகோதரர்களுக்கும், நேரிலும், தொலைபேசியிலும், குறுந்தகவல் ஊடாகவும், ஆறுதலைக் கூறியும், இறுதிக் கிரியையின் போது கண்ணீர் அஞ்லிகளையும் அனுதாபங்களையும் தெரிவித்த நல்லுறவுகள் அனைவருக்கும், தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் இராஜகுமார் அவர்களின் இறுதிக் கிரியையில் கலந்து எங்களுக்கு ஆறுதல் கூறியும், சிரமம் பாராது உதவிகளையும் செய்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.