Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 22 SEP 1975
இறப்பு 15 JUL 2024
திரு வ.ஐ.நல்லதம்பி சசிகுமார்
புதுக்கடை உரிமையாளர் மற்றும் நெடுந்தீவு பிரதேசசபை முன்னாள் தவிசாளர்
வயது 48
திரு வ.ஐ.நல்லதம்பி சசிகுமார் 1975 - 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நெடுந்தீவு மேற்க்கு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வ.ஐ.நல்லதம்பி சசிகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நீங்காத நினைவு தந்து- நீ
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம்
தானா - என்று நினைக்கும்
முன்னே நீ மறைந்தது ஏனோ?

விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான் இல்லையன்றோ

கண்ட பல கனவிலும்
வந்து வந்து போகுதடா
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?

நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா! உதிர்ந்து
நீ போனாலும் உருக்கும்
உன் நினைவுகள் - எம் உள்ளத்தில்
என்றென்றும் உறைந்திருக்கும்
உன் பிரிவினால்
வாடும் குடும்பத்தினர்..!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின்சமயக் கிரியைகள் 10-08-2024 சனிக்கிழமை அன்று காலை 05.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து 14-08-2024 புதன்கிழமை 31ம் நாள் நினைவஞ்சலி சபீண்டிகரண கிரியைகளிலும் நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு அவரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்