
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆயிரம் பிறை கண்டு நிறைவேற்று வாழ்ந்தவர்
தீவுப்பகுதியில் புகழ் பூத்த விளையாட்டுத்துறை அதிகாரியாகவும் சமூகசேவையாளராகவும் திகழ்ந்த அமரர் பேரம்பலம் பொன்னுச்சாமி ( மாஸ்டர்) அவர்களின் இழப்பு மிகவும் கவலைக்குரியது. அன்னார் 85 வயதில் காலமான போதிலும் அவரது சமூக,சமய பணிகளால் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற விருப்பம் மக்கள் மத்தியில் உள்ளது.
புளியங்கூடல் ஸ்ரீ மகாமாரி அம்பாள் மீது அளவில்லாப் பக்தி கொண்டவர்.கோவில் திருவிழா காலத்தில் புளியங்கூடல் சனசமூக நிலைய உறுப்பினர்களை கொண்டு கோவில் வீதிகளை துப்புரவு செய்து தண்ணீர் தெளித்து சுத்தமாக வைத்திருப்பார்.
பின்பு மதியம் புளியங்கூடல் இந்து இளைஞர் சங்கத்தினரால்
நடத்தப்படும் அன்னதானம் வழங்கும் போது உணவு பரிமாறுவதற்கு வேண்டிய உதவிகளை செய்வார்.இவ்வாறு பல பணிகளை ஆற்றினார்.
அற்புதமான ஓர் மனிதர் , தமது வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து விட்டு இம்மண்ணை விட்டு மறைந்தது அனைத்து நெஞ்சங்களுக்கும் மிகுந்த துயரை தந்த போதிலும் இயற்கையின் நியதியை ஏற்றுக்கொண்டு இறைவனிடம் அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்.
தேசமான்ய பேராறு
அ.குமாரசுவாமி
ஒட்டுசுட்டான்/கற்சிலைமடு
Write Tribute
'தல' என்றால் நடிகர் அஜித் என்பது பிரபல்யமான ஒன்று. அவ்வாறேஅமரரைத் 'தலைவர்' என்பது அமரர் பிறந்த ஊரார் அனைவரிடத்தும், அவரின் அயல்கிராம மக்களிடத்தும் பிரபல்யமானது.ராசாவாத்தியார் ஆரம்ப...